Posts

Showing posts from November, 2018

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி II

பதிவு 1 பெரியாருக்கு யுனெஸ்கோவின் பாராட்டு: ஜூன் 27 1970ம் ஆண்டு ஐ.நா வின் நிறுவனமான (இந்திய பிரதிநிதி) யுனெஸ்கோ மன்றம் பெரியாருக்கு கீழ்க்கண்டவாறு பாராட்டு தெரிவித்தது (மொழிபெயர்ப்பு) "பெரியார், புதுயகத்தின் பிதாமகன், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களின் பரம எதிரி!" The UNESCO Manram , an Indian representative of   international organisation of the United Nations , conferred on Periyar a glorious title the citation of which reads as " Periyar the prophet of New Age , Socrates of South East Asia , Father of the social Reform Movement , and Arch enemy of ignorance , superstitions , meaningless customs and base manners " - UNESCO 27-6-1970 பதிவு 2 அனைவருக்கும் மருத்துவக்கல்வி (சமூகநீதி) : சமக்கிருத தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவக்கல்லூரியில் சேர தகுதியானவர் என்ற அவலம் தமிழகத்தில் இருந்தது!  (100% இட ஒதுக்கீடு!)

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்! - பகுதி I

திரும்பிப்பார், நிமிர்ந்து நில்!  ( நூற்றாண்டை கடக்கும் சுயமரியாதை, சமூகநீதி இயக்கம் ) பதிவு 1 சத்துணவு திட்டம் (சமூக நீதி): 1 923 இல் நீதிக்கட்சியாலும், பிறகு 1955 இல் காமராஜராலும் துவங்கப்பட்ட மதிய உணவு திட்டம், செப். 15 1982 இல் சத்துணவு திட்டமாக எம். ஜி. ஆரால் அறிமுகபடுத்தபட்டது. மைய அரசின் நிதி அளிக்காத போக்கையும், விமர்சனங்களையும் கடந்து 5 ஆண்டுகளில் உலக வங்கியின் பாராட்டை பெற்றது.  தமிழகத்தை பின்பற்றி இத்திட்டத்தை மைய அரசு நாடெங்கிலும் 2002 இல் அமலாக்கியது! பதிவு 2 சீர்திருத்த திருமணம் (சுயமரியாதை): மந்திரச் சடங்குகள் ஏதுமில்லா இந்து முறை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்த முதல் மற்றும் ஒரே மாநிலம் தமிழகம். மார்ச் 6 ஆம் தேதி 1967 இல் தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா கையெழுத்திட்ட முதல் ஆணை! பதிவு 3 நெருக்கடி நிலைக்கு எதிரான தீர்மானம் (சுயமரியாதை): ஆட்சி அகற்றப்படும் என்று தெரிந்தும் நெருக்கடி நிலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய ஒரே மாநிலம் தமிழகம்! ஜூன மாதம்் 27 ஆம் நாள் 1975 இல் நெருக்கடி நிலைக்கு எதிரான பல தீர்மானங